July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டள்ளது.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வாரத்தில் இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும், அதன்பின்னர் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொறுப்பான அமைச்சர் பொறுப்பின்றி நடந்துகொள்வதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.