June 1, 2025 18:18:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை

எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா இது தொடர்பாக கருத்து தெரிவித்த போது,

பெற்றோல் விலையை லீட்டருக்கு 20 ரூபாயும், டீசலின் விலையை லீட்டருக்கு 30 ரூபாயும் உயர்த்த அரசாங்கத்தின் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, எரிபொருள் விலையை அதிகரிக்க எதிர்பார்க்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.