July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடுவீதியில் மோதல்: நபரொருவரின் இரண்டு கைகளும் துண்டிப்பு!

களுத்துறை, பண்டாரகம பகுதியில் ஆட்டோ ஒன்றில் இருந்த இருவர் மீது நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதன்போது ஆட்டோவில் இருந்த ஒருவரின் இரண்டு கைகளும், மற்றையவரின் ஒரு கையும் துண்டாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு கைகளும் துண்டாக்கப்பட்ட நபர் பாதையில் ஓடிச் சென்று கீழே விழுந்துள்ள போதிலும் அவருக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கையொன்று துண்டாகிய மற்றைய நபர் பொலிஸ் நிலையத்திற்கு ஓடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல் தொடர்பில்அண்மையில் விளக்கமறியலில் இருந்து வெளியில் வந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தாக்குதலுக்கு இலக்கானவர்களும் போதைப் பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இவர்களுக்கிடையே போதைப் பொருள் தொடர்பான சண்டை ஏற்பட்டே இவ்வாறு அவர்கள் இருவரின் கைகள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தின் பின்னர் கைகள் துண்டாகிய நபர்கள் அம்பியூலன்ஸ் மூலம் பொலிஸாரினால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.