![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/04/12628461_10153300294537765_6696268430360129308_o-e1619069108924.jpg?fit=645%2C417&ssl=1)
பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் ‘அபே ஜனபல’ கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அபே ஜனபல கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக 2021 ஜனவரி மாதம் 5 ஆம் திகதி அதுரலியே ரதன தேரர் பதவியேற்றார்.
அவர் 6 மாதங்களுக்கு பதவி வகிப்பதாகக் கூறி பதவியேற்ற நிலையில், பதவியை விட்டுத்தர மறுப்பதாக அபே ஜனபல கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், கட்சியில் இருந்து ரதன தேரரை விலக்குமாறு அபே ஜனபல கட்சி தேர்தல் ஆணைக்குழுவைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தனக்கு இவ்விடயம் எழுத்து மூல கோரிக்கையாக கிடைத்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.