July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலையில் பழைய ஞாபகங்களை மீட்டிய இந்திய இராணுவத் தளபதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந் நரவானே, இன்று திருகோணமலைக்கு சென்றிருந்தார்.

இதன்போது, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து, இந்திய இராணுவத் தளபதி கலந்துரையாடியுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் வாசஸ்தலம் அமைந்துள்ள இடத்தில், அக்காலப்பகுதியில் இந்திய இராணுவ முகாம் அமைந்திருந்ததாக இந்திய இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில், குறித்த இராணுவ முகாமில் தான் தங்கியிருந்துள்ளதாகவும், அப்போது இந்திய இராணுவத்தின் லெப்டினனாக கடமையாற்றி இருந்ததாகவும் அவர் தனது ஞாபகங்களை மீட்டுள்ளார்.

இதன்போது இந்திய இராணுவத் தளபதியால் அரசாங்க அதிபருக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டதுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இந்திய இராணுவ தளபதிக்கு நினைவு பரிசிலொன்றை வழங்கி வைத்துள்ளார்.