July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி!

File Photo

காலி, ஹீனடிகல  – பொல்துவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் வீதியால் பயணித்த போது, வாகனமொன்றில் வந்த இனந்தெரியாத குழுவொன்று அவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதன்போது காயமடைந்த அந்த நபர், அங்கிருந்தவர்களினால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.