July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் பிணை

சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஐவருக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழங்கு இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சதொச நிறுவனத்தின் நான்கு அதிகாரிகளும் சம்பவத்தில் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வர்த்தகரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு இவர்களைக் கைது செய்திருந்தது.

மோசடியாக விற்பனை செய்யப்பட்ட 54 ஆயிரம் கிரோ கிராம் வெள்ளைப்பூண்டு தொகை கடந்த செப்டம்பர் மாதம் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்களான நான்கு அதிகாரிகளும் சதொச நிறுவனத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.