
இலங்கையில் கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு தமது தொலைபேசி இலக்கத்தை மாற்றாது, அதே இலக்கத்தில் வேறு தொலைத் தொடர்பு வலையமைப்புடன் இணைவதற்கு வசதியளிக்கப்படவுள்ளது.
இதற்கான சட்டப்பூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எந்வொரு தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் சிம் அட்டைகளை கொண்டிருந்தாலும், அதே சிம் அட்டை இலக்கத்துடன், வேறு வலையமைப்பு நிறுவனத்தின் கீழ் மாற்றிக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றில் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அனைத்து தொழில்நுட்ப செயற்பாடுகளும் நிறைவடையும் பட்சத்தில், 2022 மே முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.