July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி கோட்டாபய – சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்தார்.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.

பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி, பாதுகாப்புச் செயலாளராக தற்போதைய ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பை ஏற்று, இலங்கை வந்துள்ள அவர், இன்று ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சுப்ரமணியன் சுவாமியை மீண்டும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.