July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டம், ஒழுங்கை ஆராய வட மாகாணம் சென்றார் பொலிஸ்மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராயும் வகையில் நாளைய தினம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கும் வகையிலேயே அவர், இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திலும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதேவேளை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தை இன்று மாலை சந்திக்கவுள்ள அவர் பின்னர் காங்கேசன்துறையில் தங்கியிருந்து, நாளை கிளிநொச்சிக்குப் பயணமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.