June 15, 2025 12:15:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியல் தலைவர்கள் எமது எல்லைக்குள் வரக்கூடாது’ : பருத்தித்துறை மீனவர்கள் எச்சரிக்கை!

இந்திய இழுவைப் படகையும், தடை செய்யப்பட்ட அனைத்து மீனவ தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்தவொரு அரசியல் தலைவர்களும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை முனை கடற்தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இன்றைய தினம் (11) பருத்தித்துறை முனை கடற்தொழிலாளர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர்.

அத்தோடு ‘அரசியல் தலைவர்கள் எங்களுடைய கோரிக்கையை மீறி எமது இடத்திற்கு வரும் பட்சத்தில் அடித்து விரட்டப்படுவார்கள் என்பதனையும் தாம் உறுதியாகவும், மன வருத்தத்துடனும் தெரிவிப்பதாக’ மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி, ‘தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் தாங்கள் மனித வெடிகுண்டுகளாக மாறி தங்களுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வோம்’ எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.