July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இத்தாலியில் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை முன்னிறுத்தி இத்தாலியின் மிலனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் பல நகரங்களிலும் வாழும் இலங்கையர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

“ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 915 நாட்கள் கடந்துள்ளபோதும் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்” என ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை உறவுகளுக்காக தமது போராட்டம் தொடரும் என மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.