![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/rice-1.jpg?fit=1024%2C699&ssl=1)
File photo
இந்தியாவிலிருந்து 5,000 மெட்ரிக் டொன் அரிசி செவ்வாய்க்கிழமை (12) காலை இலங்கை வர உள்ளது.
இதற்காக இந்தியாவில் இருந்து 5,000 மெட்ரிக் டொன் அரிசி கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் அமைச்சரவை முடிவிற்கமைய அதன் முதல் தொகுதி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யும் அரிசி 12 ஆம் திகதி சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அரிசியை ஒரு கிலோ 100 ரூபாவிற்கும் குறைவான விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்னதாக தெரிவித்திருந்தார்.