May 31, 2025 5:31:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திசர பெரேராவின் பந்தை எதிர்த்தாடிய ஜனாதிபதி கோட்டாபய

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருட நிறைவையொட்டி அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அங்கு விளையாட்டு மைதானமொன்றை திறந்து வைத்தார்.

இதன்போது அவர், மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும் ஈடுபட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசர பெரேரா பந்துவீச, ஜனாதிபதி அதனை எதிர்த்தாடினார்.

இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,  முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸ் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.