![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/IMG_5302.jpg?fit=1024%2C576&ssl=1)
புத்தளம் மாவட்டத்தின் கல்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நுரைச்சோலை- இலந்தையடி பிரதேச விவசாயிகள் உரத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள அதிகளவிலான விவசாயிகள் ஜீவனோபாய தொழிலாக விவசாயத்தை பாரம்பரியமாக மேற்கொண்டு வரும் நிலையில், தமது விவசாயத்திற்கு உரம் மற்றும் கிருமி நாசினி இல்லாமல் தாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் உரத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமவின் கொடும்பாவியும் விவசாயிகளினால் எரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் புத்தளம் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.