July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகந்துரே மதுஷின் முக்கிய சகாவான ‘பொடி பெடி’ கைது!

மாகந்துரே மதுஷின் முக்கிய சகாவான ‘பொடி பெடி’ (29) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பிலியந்தலை பகுதியில் வைத்து பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின், நியோமல் ரங்கஜீவ உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்வம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஐந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் களுத்துறை குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேக நபர் குருந்துவத்தை, மீகம வீதியில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

2017  மே 9, அன்று, பிலியந்தலை பகுதியில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சுற்றிவளைப்பின் போது போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின், நியோமல் ரங்கஜீவ உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது கடத்தல்காரர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெப்ரவரியில் முகமது நவாஸ் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.