![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/244670539_2457384897739781_7892017541911823738_n.jpg?fit=624%2C351&ssl=1)
ரஷ்யாவுக்கான இலங்கையின் புதிய தூதுவரான பேராசிரியர் ஜனித அபேவிக்ரம லியனகே நேற்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
தூதரக ஊழியர்களின் வரவேற்புடன் நடைபெற்ற நிகழ்வில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நட்புறவை மேலும் உயரத்திற்குக் கொண்டுசெல்வதற்கு தான் அர்ப்பணிப்புடன் பணியாற்றவுள்ளதாக பேராசிரியர் ஜனித லியனகே தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜனித, ரஷ்ய கூட்டமைப்பின் அரச நெறிமுறைத் திணைக்களத்தின் பணிப்பாளரைச் சந்தித்து, நியமனக் கடிதங்களை கையளித்துள்ளார்.