June 15, 2025 12:48:43

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நிர்வாகி குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலமானார்.

1929 ஆம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி பிறந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், தனது 92 ஆவது வயதில்  இன்று காலமாகியுள்ளார்.

1964 டிசம்பர் 15 முதல் இறுதிக் காலம் வரையில் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியாக இவர் பணியாற்றி வந்தார்.

குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் இழப்பு தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ள யாழ். மாநகர சபை முதல்வர் வி. மணிவண்ணன்,  ”மிகச்சிறந்த பண்பாளன் எல்லாவற்றுக்கும் மேலாக ஆடம்பரமோ பந்தாவோ அற்ற எளிமையின் வடிவமான மிகச்சிறந்த மனிதன் மிகச்சிறந்த நிர்வாகி அவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.