July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!

இலங்கையில் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் பெற்றவர்கள் 2022 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலப்பகுதி பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் துப்பாக்கிகளுக்கான அனுமதி பத்திரங்களை 2021 டிசம்பர் முதலாம் திகதி முதல் 2022 பெப்ரவரி 28ம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் புதுப்பிக்க வேண்டும்.

இந்த காலக்கெடு 2022, பெப்ரவரி 28ஆம் திகதியுடன் முடிவடைந்த பின்னர் துப்பாக்கி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவேளை, அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத துப்பாக்கிகளை தம்முடன் வைத்திருப்பது, துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் 22வது சரத்துக்கமைய தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.