May 30, 2025 15:02:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் முன்னணி வர்த்தகர் கைது!

சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வெள்ளைப்பூண்டு மோசடி குற்றச்சாட்டில் முன்னணி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வெள்ளைப்பூண்டு தொகையைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அந்த வெள்ளைப்பூண்டு தொகையை மீண்டும் சதொச நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் நாளை வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.