July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நானும் மனைவியும் எவ்வித சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை’: திருக்குமார் நடேசன்

‘பென்டோரா பேப்பர்ஸ்’ இரகசிய ஆவணங்களில் பெயர் வெளியானதைத் தொடர்ந்து, திருக்குமார் நடேசன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தானும் தனது மனைவியும் எவ்வித சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்று குறித்த கடிதத்தில் திருக்குமார் நடேசன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஒன்றுவிட்ட சகோதரியான நிரூபமா ராஜபக்‌ஷவின் கணவரே திருக்குமார் நடேசன்.

இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து முறையற்ற விதமாக இலாபமீட்டியதாக நிரூபமா ராஜபக்‌ஷ மற்றும் திருக்குமார் நடேசன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தாம் அப்பாவிகள் என்றும் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறும் நடேசன், ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.