June 15, 2025 22:38:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆபாச பேச்சுக்களை தடை செய்ய வருகிறது சட்டம்!

Social Media / Facebook Instagram Twitter Common Image

இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் வாயிலாக உருவாக்கப்படும் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்வது தொடர்பான சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பங்களின் ஊடான ஆபாசப் பேச்சுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2020 செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.