இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் கிரிவெஹெர மற்றும் கதிர்காமம் ஆலய வளாகங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவ கொடிகளை சிப்பாய்கள் வரிசைக்கிரமமாக ஏந்திச் சென்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து இராணுவ படையணிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள், படைப்பிரிவுகள், பிரிகேட்கள், பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் இராணுவக் கொடிகளானது ஆசிர்வாதத்திற்காக மூன்று முறை கிரிவெஹெர தூபியை வாத்திய இசையுடன் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
அதனையடுத்து புனித தூபியை சுற்றிலும் கொடி சுற்றும் நிகழ்வு இடம்பெற்றதுடன் சகலரும் எண்ணெய்த் தீபங்களை ஏற்றி, கிலன்பச பூஜையில் ஈடுபட்டுள்ளனர்.