June 11, 2025 13:56:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் வீசா காலம் நீடிப்பு!

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 30 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

இதற்கமைய 2021 மே 11 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரையிலான காலாப்பகுதியில் காலாவதியாகும் வீசாக்கள் ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் நவம்பர் 6 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு புதிப்பிக்கப்படும் வீசாக்களுக்கு மேற்கூறிய காலத்திற்கான வீசா கட்டணம் மட்டுமே விதிக்கப்படும் எனவும், அபராதம் எதுவும் வசூலிக்கப்படாது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.