July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லொஹான் ரத்வத்தவால் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் 8 தமிழ் அரசியல் கைதிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மனுதாரர்கள் தமது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.