July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேத்தியை முதன்முறையாகப் பார்த்த ஜனாதிபதியின் பதிவு

அமெரிக்காவில் தனது மகனின் மகளை முதன்முறையாக பார்த்தமை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தான் பேத்தியுடன் எடுத்த புகைப்படத்தை இணைத்து சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஜனாதிபதி அந்தப் பதிவை இட்டுள்ளார்.

”அண்மையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நான் அமெரிக்கா சென்றபோதுதான், எனது பேத்தியை முதன்முறையாகப் பார்க்க கிடைத்தது” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

”மகன் மனோஜ் மற்றும் மருமகள் செவ்வந்தி ஆகியோர் பெற்றோர் ஸ்தானத்தை அடைந்தமைக்கு எனது வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக செப்டம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, இன்று காலை நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.