July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் கொரோனா தொற்று நீங்க வேண்டி யாழில் விசேட ஆராதனை

நாட்டில் கொரோனா தொற்று நீங்கவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுகமடைய வேண்டியும் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் யாழ்ப்பாணம் மரியன்னை சிற்றாலயத்தில் இந்த விசேட  ஆராதனை நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய நான்கு மறை மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு, கிழக்கு ஆயர் மன்றத்தினரால் ஒவ்வொரு மாவட்டத்திலும் விசேட ஆராதனை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய யாழ்ப்பாணம் மரியன்னை சிற்றாலயத்தில் இடம்பெற்ற ஆராதனையின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நீங்க  பிரார்த்தனை செய்யப்பட்டதுடன்,  தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் வேண்டி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

குறித்த விசேட ஆராதனையில் யாழ். மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருமார்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.