![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/03/Crime-e1626934796774.jpg?fit=596%2C296&ssl=1)
வீடொன்றுக்குள் பலவந்தமாக நுழைந்த குழு ஒன்று நடத்திய தாக்குதலில் வீட்டில் இருந்த 65 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பதுளை, லிதமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இரும்புக் கம்பியால் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர், பதுளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
பதுளை, லிதமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் 21, 24 மற்றும் 31 வயதுகளையுடைய இளைஞர்கள் மூவரைச் சந்தேகத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.