July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னாரில் பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!

மன்னார், முருங்கன் பகுதியில் பெருமளவு ஐஸ் போதைப் பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 9 கிலோ 920 கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, முருங்கன் பகுதியில் பொலிஸ் காவல் தடுப்பில் லொரி ஒன்றை சோதனைக்காக மறித்த போது, கட்டளைகளை மீறி சென்ற லொரியை துரத்திச் சென்று சோதனையிட்ட போது, அதில் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி 79 மில்லியன் ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியாவில் வசிக்கும் 30 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

This slideshow requires JavaScript.