June 13, 2025 20:06:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊரடங்கு காலத்தில் பொறுப்புடன் செயற்பட்ட மக்களுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த போது, பொறுப்புடன் செயற்பட்ட மக்களுக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றி தெரிவித்துள்ளார்.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகளை பின்பற்றி செயற்பட்டதன் காரணமாக நாட்டில் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்போது நாடு திறக்கப்பட்டுள்ள போதும் அவசர தேவைகள் மற்றும் தொழிலுக்காக அன்றி வேறு தேவைகளுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே நாடு திறக்கப்பட்டதன் பின்னர் அமுல் படுத்தப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுகின்றதா என சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கூறியுள்ளார்.

இதனை கொண்டே, அடுத்த இரண்டு வாரங்களின் பின்னர் சுகாதார வழிகாட்டுதல்களை தளர்த்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.