June 13, 2025 6:55:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களுக்கே இவ்வாறு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக வடக்கு, வடமேல், மேல், சபரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுகின்றது.