![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/09/Central-Bank-e1635258906534.jpg?fit=511%2C272&ssl=1)
இலங்கையில் தற்போது வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களே இருக்கின்றது என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதிர்வரும் 6 மாதங்களுக்கான பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் 6 மாதங்களை இலக்காகக் கொண்டு பொருளாதாரத்திற்கான திட்டப் பாதையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனை வெளியிடும் நிகழ்வு இன்று முற்பகல் இலங்கை மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.