May 23, 2025 18:05:02

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கல்வி அதிகாரிகளுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில் வழங்குவதில் ஊழல்’: ஆசிரியர் சங்கம் முறைப்பாடு

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரிட்டனில் புலமைப் பரிசில் வழங்கும் செயன்முறையில் ஊழல் நடைபெறுவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பிரிட்டனுக்கு புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்துக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகளைத் தெரிவு செய்வதில் பல்வேறு ஊழல் நடைபெறுவதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளது.

குறித்த விடயத்தில் நடைபெறும் ஊழலை விசாரணை செய்யுமாறு இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

புலமைப் பரிசிலுக்கு 54 கல்விப் பரிபாலன சேவை அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட முறை, சட்ட விரோதமானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.