July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக 8 தமிழ் அரசியல் கைதிகள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அனுராதபுர சிறைச்சாலையில் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தை அடிப்படையாக வைத்தே, இவ்வாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜாரராகவுள்ளனர்.

தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளைச் சந்தித்த பின்னர், இவ்வாறு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.