![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/WhatsApp-Image-2020-11-01-at-7.43.27-PM-e1605104952234.jpeg?fit=1024%2C575&ssl=1)
இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அவ்வாறே தொடரும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
எனினும் கொவிட் தொற்று அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருந்து முற்றாக நீங்காத காரணத்தினால், சில கட்டுப்பாடுகளை தொடர்வதற்கு கொவிட் தடுப்புச் செயலணி தீர்மானித்துள்ளது.
இதன்படி மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை தளர்த்தாது தொடர்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.