July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை – இந்திய கடல் எல்லையில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த கலந்துரையாடல்!

இலங்கை – இந்திய கடல் எல்லைப் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு இருநாடுகளின் கடற்படையினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை எல்லைக் கண்காணிப்புக்காக இரு நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பாடல் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்கும் ஆராய்ந்துள்ளனர்.

இலங்கை – இந்திய கடற்படையினருக்கு இடையே, வீடியோ தொழில்நுட்பவம் ஊடாக நேற்று நடத்தப்பட்ட 31 ஆவது சர்வதே கடல் எல்லை தொடர்பான கூட்டத்திலேயே இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது இருநாடுகளின் கடற்படையினரும், தமது கடல் எல்லைப் பகுதிகளில் முகம்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை – இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டும் விடயங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.