May 14, 2025 22:01:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியத் துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை போக்குவரத்து, கமநலம், சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.