October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று முற்பகல் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பிரதமரின் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.