May 31, 2025 13:45:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுய தொழில் புரிவோருக்கு தொழிலில் ஈடுபட அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சுய தொழில் புரிவோருக்கு தொழிலில் ஈடுபட அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுபானசாலைகளைத் திறக்க முடியுமாயின் சுய தொழில் புரிவோர் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுய தொழில் புரிவோர் தொழிலில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீடிக்கப்படும் தனிமைப்படுத்தல் ஊரடங்கால் தமக்கு தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுய தொழில் புரிவோரின் மனு ஒக்டோபர் 4 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தமது உறுப்பினர்கள் 7000 பேருக்கு தொழில்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுய தொழில் புரிவோர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.