June 15, 2025 19:46:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நாட்டின் சொத்துக்களை விற்பதற்கு எதிராக வீதிக்கு இறங்குவோம்”: சஜித்

நாட்டின் வளங்களை தமது தனிப்பட்ட சொத்துக்களைப் போன்று விற்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  தேசிய சொத்துக்களை விற்பனை செய்கின்றமைக்கு எதிராக அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து மக்கள் அரண் ஒன்றை  அமைக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பானம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை கிழித்தெறிந்து, நாட்டைக் காட்டிக்கொடுக்கும் திட்டத்தையே செயற்படுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதுமாத்திரமின்றி, கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தை அரசாங்கம் இரகசியமாக விற்று, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

எவ்வாறாயினும்  சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாட்டை மீட்பதற்கான போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.