July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மட்டக்களப்பில் லொஹான் ரத்வத்த தலைமையில் நடைபெற்ற கூட்டம்!

இரண்டு சிறைச்சாலைகளில் கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தின் பின்னர்  இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கட்சி  கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கட்சி அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

அவர் குறித்த கூட்டத்திற்கு தலைமை தாங்கியதோடு, கூட்டம் தொடர்பான படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து அவர் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அத்தோடு இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிக்கின்றார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதையும் தவிர்த்து வந்தார்.