தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சியில் அமைந்துள்ள காரியாலயமான அறிவகம் செல்லும் வீதி பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி இன்றைய தினம் (25) சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்திற்கு சென்று, நாளைய தினம் (26) திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை காரியாலயத்தில் செய்ய திட்டமிட்டிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்தே பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.