July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மக்களின் நடத்தை அடுத்து வரும் மாதங்களில் தீர்மானமிக்கது” – இராணுவத் தளபதி!

ஒக்டோபர் மாதத்தில் பதிவாகும் கொவிட் -19 நிலவரங்கள் அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறினார்.

ஒக்டோபர் 1 ஆம் திகதி நாடு திறக்கப்பட்டால் அடுத்து வரும் காலப்பகுதியில் பொது மக்களின் நடத்தை மிகவும் முக்கியமானது எனவும் இராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை மீண்டும் திறந்ததன் பின்னர் சேவைகளை செயல்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் நோய்த் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக அவர் கூறினார்.

நாட்டில் புதிய கொவிட் கொத்தணிகள் உருவாகுவதை தடுக்கும் வகையில் பெரிய கூட்டங்களை தடுப்பதற்காக நாட்டை பல கட்டங்களாக மீண்டும் திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவத் தளபதி மேலும் கூறினார்.