July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அனுராதபுர சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் நலம் விசாரித்த கூட்டமைப்பு உறுப்பினர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாiயில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் அச்சுறுத்தப்பட்ட அரசியல் கைதிகளையே, இவர்கள் சந்தித்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோரும் சென்றுள்ளனர்.

கைதிகளை அச்சுறுத்திய சம்வபம் தொடர்பான விசாரணைகள் முறையாக நடைபெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தமிழ் பிரதேசத்தில் உள்ள வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்று சுமந்திரன் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

அனுராதபுரம் சிறையில் உள்ள கைதிகளின் தடுப்புக் காலம் நீடிக்கப்படாமல், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

This slideshow requires JavaScript.