June 12, 2025 15:05:18

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைக் கைதிகள் இருவர் சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு!

முன்னாள் விடுதலைப் புலி சந்தேகநபர் உட்பட இரண்டு கைதிகள் இம்முறை நடைபெற்ற க.பொ.த.  சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக  சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மெகஸின் சிறைச்சாலை மற்றும் வடரக சிறைச்சாலையில் உள்ள நான்கு கைதிகள் 2020 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள நிலையில் அவர்களில் இருவர் பாராட்டத்தக்க முடிவுகளை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் சிறை கைதிகள் பலர் பல்வேறு பரீட்சைகளில் சித்தியடைந்துள்ளதுடன், சிலர் முதுகலை படிப்புகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டது.