June 16, 2025 10:12:36

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திலீபனின் நினைவு நிகழ்வுக்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக பொலிஸார் தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26 ஆம் திகதி திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, அதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் நிலவும் கொவிட் 19 பரவல் காரணமாக, நடைமுறையில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது. எனவே திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கவேண்டும் என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவை விதித்துள்ளது.

எனினும் தடையுத்தரவில் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லை.