
அரசாங்கம் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமூக ஊடகங்கள் தொடர்பில் ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என்று அறிவித்திருந்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமூலமொன்றை சமர்பிக்க வேண்டும் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும், சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சுய ஒழுங்கு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சிலர் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போலி செய்திகளை கடுமையான சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்றும் கலந்துரையாடி, நட்புறவுடன் ஒழுக்கக் கோவைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.