July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மத்திய வங்கி நாணயச் சபைக்கு புதிய செயலாளர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் புதிய செயலாளராக ஜே.பி.ஆர் கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

செப்டெம்பர் 15 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், நாணயச் சபையின் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஜே.பி.ஆர். கருணாரத்ன, அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக முதுமானிப் பட்டத்தினையும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பிரயோகப் புள்ளிவிபரவியலில் பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டத்தினையும் மற்றும் விஞ்ஞானமானி (பௌதீக விஞ்ஞானம்) பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினராகவும், இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் இணை உறுப்பினராகவும் உள்ளார்.

முன்னதாக, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் செயலாளராக உதவி ஆளுநரான கே.எம்.ஏ தவுலகல கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.