July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநாவில் ஜனாதிபதி கோட்டாபய இன்று உரையாற்றுவார்

ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று உரையாற்றவுள்ளார்.

ஐநா சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் நேற்று நியூயோர்க் நகரில் ஆரம்பமாகியது.

‘கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி’ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை ஐநா பொதுச் சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரையாற்றவுள்ளார்.

தனது உரையின் போது, இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து, தமது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார்.

இதேவேளை ஐநா கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொள்ளவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.