June 15, 2025 0:25:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரந்தலாவை பிக்குகள் படுகொலை; விசாரணைக்கு உத்தரவு

1987ஆம் ஆண்டில் அரந்தலாவயில் பௌத்த பிக்குகள் 34 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, அதன் அறிக்கை​யை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்குமாறும் சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

1987 ஜுன் 2 ஆம் திகதி இடம்பெற்ற அந்த படுகொலை சம்பவத்திலிருந்து உயிர் தப்பிய அன்டவுல்பொத்த புத்தசார தேரர் என்ற பிக்கு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை கடந்த ஜுன் மாதத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாத குழுவை சேர்ந்த எவரேனும் உயிருடன் இருந்தால் அவர்களை விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.